செய்திகள் :

நூல் விலைஉயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்பு

post image

திருப்பூர்:

தமிழக நூற்பாலைகள் கடந்த 7 மாதங்களாக, பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஒசைரி நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் பாதிப்புகளை சந்தித்து வரும், திருப்பூர் பின்னலாடை துறையினர் நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, மார்ச் 15-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க(டீமா) தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், ‘பஞ்சு விலை சீராக உள்ள போதும், நூல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பெரிய, சிறிய நூற்பாலைகள், போட்டி போட்டு விலை உயர்த்துகின்றன. இதுவரை, கிலோவுக்கு ரூ.92 உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர், கரூர், ஈரோடு உட்பட தமிழக ஆடை உற்பத்தி துறையினரை ஒருங்கிணைத்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.